முதன் முறையாக இலங்கை வந்தடைந்த உலகின் அதி நவீன விமானம்

உலகின் அதி நவீன பயணிகள் விமானம் முதன் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் போயிங் 787-10 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் 277 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்துள்ளதுடன் பின்னர் 377 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் நேரடி விமான சேவை இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.